சனி, 28 மார்ச், 2009

பா.விஜய்யின் ‘ஞாபகங்கள்'


கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஞாபகங்கள்'. அப்போ ‘தாய்க்காவியம்' என்னாச்சுன்னு ஞாபகமா கேட்காம, புது படத்தோட செய்திய மட்டும் கேளுங்க!

வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பா.விஜய் கதை,வசனம்,பாடல் எழுதி தயாரிக்கும் படம்தான்'ஞாபகங்கள்'. இவருக்கு ஜோடியா ஸ்ரீதேவிகா நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்திருக்கும் இப்படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் ஜீவன்.

வாழ்க்கையின் இறுதி அத்யாயத்தில் இருக்கும் ஒவ்வொரு மனுஷனுக்கும் மறக்கமுடியாத சில நினைவுகள் மனசுக்குள் நங்கூரம் பாய்ச்சிக்கொண்டிருக்கும். அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாத அந்த ஞாபகங்களின் தொகுப்பே இப்படத்தின் கதையாம்.

சென்னையின் பல இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்த கையோடு, ஊட்டி,கோவை, கோபிசெட்டிப்பாளையம்,மதுரை ஆகிய இடங்களில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்களாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக