புதன், 11 மார்ச், 2009

'வேட்டைக்காரனில்’ விஜய் ஆட்டம்




ஆந்திரா லோகேஷனில் டேரா போட்டுள்ளது வேட்டைக்காரன் யூனிட். ரெண்டு நாளைக்கு முன்னாடி ராஜமுந்திரியில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.


பாகப்பிரிவினைக்கு பிறகு ஏவி.எம்மில் அண்ணன், தம்பிகள் ரெண்டா பிரிந்து தனித்தனியாக படம் தயாரித்துவருகிறார்கள். ஏவி.எம்.சரவணனின் சகோதரரான எம்.பாலசுப்ரமணியமும் அவரது மகன் பி.குருநாத்தும்தான் வேட்டைக்காரனுக்கு முதல் போடுறாங்க.பேனர் ஏவி.எம்தான்.

‘வில்லு’ வெற்றியா,தோல்வியானெல்லாம் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்காம, இளையத்தளபதி வேட்டைக்காரனில் வேகம் காட்டி வருகிறார். தரணிக்கிட்ட டைரக்‌ஷன் தொழில் கத்துகிட்ட பி.பாபுசிவன்தான் படத்தை இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார்.ஸ்ரீஹரி,சலிம்கோஷ்,சாயாஜிஷிண்டே,சத்யன்னு படத்துல நிறையபேர் இருக்காங்களாம்.

சரி இப்போ ராஜமுந்திரிக்கு வருவோம். படத்துல வர்ற ஓபனிங் சாங்தான் முதற்கட்டமா படமாகி வருது.விஜய்யுடன் 100 நடனக்கலைஞர்களும் நடனமாட,ஷோபி மாஸ்டர்தான் பெண்டு நிமித்தும் வேலையை செய்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக