செவ்வாய், 24 மார்ச், 2009

மகனுடன் ஆட்டம் போட்ட விஜய்


இருபது வருடங்களுக்கு முந்தைய எஸ்.ஏ.சந்திரசேகரின் படங்களில் ஒல்லியான உருவத்துடன் ஏழை மாணவனாக ஒன்றிரண்டு சீன்களில் தலைக்காட்டியவர்தான் விஜய். இவர்தான் இளையதளபதியாக பின்னாளில் விஷ்வரூபம் எடுக்கப்போகிறார் என்பது தெரியாது.

இப்போது இந்த பிளாஸ்பேக்கிற்கு அவசியமென்ன என்கிறீர்களா? அவசியம் இருக்கு. இளமை காலத்தில் விஜய்யின் ஒரு சீன் தரிசனம் போலவே அவரது மகனும் நடிக்கத் தொடங்கிவிட்டார். யெஸ். வேட்டைக்காரன் படத்தில் விஜய்யின் மகன் ஜேஷன் சஞ்சய் நடிக்கிறார்.

ஏவிஎம் தயாரிப்பில் பாபுசிவன் இயக்கிவரும் 'வேட்டைக்காரன்' படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன் ராஜமுந்திரியில் தொடங்கியது. படத்தில் இடம்பெறும் ஓபனிங் பாடலுக்காக விஜய்யுடன் இணைந்து 100 நடனக்கலைஞர்கள் நடனமாடியுள்ளனர். மாஸ்டர் ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

இதில் விஜய்யுடன் ஒரு சிறுவனும் ஆடினால் நன்றாக இருக்கும் என ஷோபி விரும்பியபோது, அதனாலென்ன, எம் பையனையே ஆடவச்சிடுறேன் என்ற விஜய், அடுத்த நாளே மகனை ஸ்பாட்டிற்கு அழைத்துவர மகனுடன் இணைந்து நடனமாடியிருக்கிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா அப்பாவை போலவே பிரமாதமாக ஸ்டெப் போட்டு அசத்திவிட்டாராம் சஞ்சய்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் மகனுக்கு தானே நடனம் பயிற்சி அளித்து வந்தாராம் விஜய்.

அப்படியே நடிப்பையும் கத்துக்கொடுத்தீட்டீங்கனா, குட்டி இளையதளபதிக்கு கட்அவுட் வைக்க தயாராகிவிடுவர் ரசிகர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக