புதன், 30 டிசம்பர், 2009

’இரும்புகோட்டை முரட்டு சிங்கம்’ பாடல் வெளியீட்டு விழா












ஞாயிறு, 20 டிசம்பர், 2009

‘கந்தகோட்டை’ விமர்சனம்

பெட்டிக்கடைகளிலும் கிடைக்கும் அளவிற்கு மலிவாகிவிட்ட மசாலா பார்முலாவில் காதல்,கத்தல், கத்தி எல்லாவற்றையும் கூட்டுவைத்து, ரசிகர்களின் கண்ணுக்கும் காதுக்கும் வேட்டு வைக்கும் படம்.
ஹீரோ நகுலுக்கு காதலுக்கு சிகப்புக்கொடி காட்டும் வேலை என்றால் நாயகி பூர்னா, காதலர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கும் சேவையில் தீவிரம் காட்டுகிறார். இருவரும் காதலர்களாக மாறும்போது இடைவேளை வருமென்பது பச்ச புள்ளைகளுக்கும் தெரிந்த்துதானே! இதிலும் அது நடக்கிறது.
நகுல் சொன்ன ஐ லவ் யூவுக்கு பதில் சொல்லாமல் பஸ் ஏறும் பூர்ணாவுக்கு ஊரில் ஒரு பிரச்சனை வருகிறது. காதலியை பார்ப்பதற்காக நாகர்கோயிலுக்கு போகும் நகுலுக்கு இது தெரியவர, அடுத்த நிமிஷத்திலிருந்து ஆரம்பமாகிறது வில்லனுடனான மோதல். கடைசியில் எது நடக்கவேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.
நகுல் ஸ்டூடண்டா, வேலை தேடுபவரா என்ற எந்த விபரமும் தெரியாமலேயே கடைசிவரை கண்ணாமூச்சி காட்டியிருக்கும் இயக்குனரின் திறமை ‘பளிச்சிடுகிறது’. குறைந்த பட்சம் அவரும் அவரது நண்பர்களும் வெட்டி ஆபீசர்கள் என்பதை காட்டியிருந்தலாவது நிம்மதி இருந்திருக்கும்.
நகுலின் சுறுசுறுப்பு, பாட்டுக்கும் பைட்டுக்கும் தோள் கொடுத்தாலும் முக பாவணைகளில் இயல்பு காணாமல்போவது மைனஸ். காமெடி பெயரில் கடித்துகுதறுகிறார் சந்தானம், அடிக்கடி ஜட்டி போட்டிருக்கியா? என்று கேட்பதெல்லாம் அபத்தம்.
”டேய் வாடா வாடா.... என் கையாலதான் உனக்கு சாவு வாடா வாடா” என்று வில்லன் சம்பத் கத்தும்போதெல்லாம் காது ஜவ்வில் விழுகிறது ஓட்டை.
ஹீரோவும் வில்லனும் மோதும்போது நாம இசையுடன் மோ’தினா’ என்ன என்று நினைத்திருப்பார்போல தினா. டகட டகட டகட என்று ஒரு பின்னணி கொடுத்திருக்காருங்க பாருங்க. படத்துல அதுவும் ஒரு வில்லனாக மிரட்டுகிறது. ‘கல கல கந்தகோட்டை’ பாட்டு குத்தாட்ட ப்ரியர்களுக்கு குஷி. நகுலின் குரலில்‘உன்னை காதலி என்று சொல்லவா’ பாடல் ரசிக்கலாம். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் ஆங்காங்கே அவுட்டாப் ஃபோக்கஸ்.
’கந்தகோட்டை’ நொந்தகோட்டை.

வெள்ளி, 18 டிசம்பர், 2009

'வேட்டைக்காரன்'விமர்சனம்

'வேட்டைக்காரன்' தலைப்பு வச்சிருக்காங்களே நல்ல கதை சிக்கியிருக்குமோ! என்ற சந்தேகம்கூட எழாமல், விஜய்யின் படம் இப்படித்தான் இருக்கும் என தியேட்டருக்குள் நுழைபவர்களின் நம்பிக்கையை கொஞ்சமும் சிதைக்காமல் காப்பாற்றியுள்ளார் இயக்குனர் பாபுசிவன்.

படிப்பிற்காகவும், பிழைப்பிற்காகவும் சென்னை வரும் நாயகனுக்கும் வில்லனுக்கும் ஏழரை பாலம் போடுவது, க்ளைமாக்ஸில் ஹீரோவுக்கு ஜெயம் கைக்குலுக்குவது என்ற பழைய பஸ் டிக்கெட்டில் எழுதிய கதையே இஸ்திரி போட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் படிக்கும் ப்ளஸ் டூ ஸ்டுடண்டுதான் விஜய். என்னது ப்ளஸ் டூ ஸ்டுடாண்டான்னு? ஆடியன்ஸ் அதிர்ச்சியாகிடக்கூடாது என்பதற்காக பல வருஷமா பரிட்சையில தேறாதவ்ர்ன்னு இயக்குனர் பிடிச்சிருக்காரு பாருங்க ஒரு லாஜிக், என்னத்த சொல்றது.. சரி அத விடுங்க! விஜய் நடிப்பு ? அதே டான்ஸ், ஒரேவிதமான டயலாக் டெலிவரி, ஜீன்ஸ் பேண்டின் தூசு தட்டி வில்லனுக்கு சேவல் ஸாரி சவால் விடுவது, வில்லன்கிட்ட பேசி தொண்டைதண்ணி வற்றிய நேரம் பார்த்து நாயகியுடன் சேர்ந்து, ரொமான்ஸ்,டூயட் என ரீலை வளர்க்க உதவுவது. ம்ஹூம் விஜய் மாறவேயில்லை.

படிக்கவந்த மகனுக்கு ஊரிலிருந்து ஒரு போன் போட்டுக்கூட நலம் விசாரிக்காத விஜய் பெற்றோரின் அக்கறை, திரைக்கதையிலும் தேடவேண்டியுள்ளது. எண்கவுண்டரில் போட்டுத்தள்ள அழைத்துச்செல்லும் போலீஸிடமிருந்து தப்பிக்கும் விஜய், மெட்ராஸ் எல்லையில்தான் குதிக்கிறார் ஆனா திடீர்னு பெரிய அருவி ஒண்ணு வருது பாருங்க, அரசாங்கம் நினைச்சாலும் அப்படியொரு லொக்கேஷனை சென்னைக்கு கொண்டுவரமுடியாதுங்கோ.

தூத்துக்குடி, சாத்துக்குடின்னு நாயகி கேரக்டருக்கு அனுஷ்காவை பிழிந்தெடுத்திருக்கின்றனர். 'புலி உறுமுது...', 'நான் அடிச்சா தாங்கமாட்ட.' பாடலை தவிர மற்ற மூன்று பாடல்களும் சில நிமிட டாக்கி போர்ஷன்களும் அனுஷ்காவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வில்லன்கனின் முகத்தை அடிக்கடி காட்டி பயமுறுத்துவதற்கு பதில், அனுஷ்காவின் க்ளோசப்பிற்கு எக்ஸ்ட்ரா சீன்கள் வைத்திருக்கலாம்.

விஜய்யின் கல்லூரி நண்பராக வருபவரின் காமெடி செம 'ஸார்ப்' . விஜய்க்காக ஊரிலிருந்து கிளம்பிவரும் நண்பர்கள் எபிசோடிலும் லாஜிக், சத்யனின் மனைவி கேரக்டர் போல அனாதயாக நிற்கிறது. ஒன்றுக்கு இரண்டு வில்லன்கள், விஜய்யின் ஆக்ஷன் அவதாரத்திற்கு கைக்கொடுக்கிறது. மற்றபடி அவர்களிடமும் பார்த்து சலித்த நடிப்புதான் எட்டிப்பார்க்கிறது.

விஜய் ஆண்டனியின் பின்னணி இசையில் போகி பண்டிகையின் டம டம. இது விஜய் படம், இயக்குனர் பாபுசிவன் தெரியவில்லை.

வேட்டைக்காரனிடம் மாட்டியது மக்கள்தான்.

புதன், 9 டிசம்பர், 2009

புவனேஸ்வரி... புழல் டூ புதியபாதை

புழல் சிறைகதவை திறந்துவிட்ட ஜாமினுக்கு கோடி புண்ணியம் சொல்கிறார் புவனேஸ்வரி. வெளியே வந்த கையோடு புதிய பாதையில் போக ஆரம்பித்துள்ளார்.
அரசியல் கட்சி. தனக்கு பாதுகாப்பு கவசம் அதுவாகத்தான் இருக்கமுடியும் என்பதால் சேதுராமன் தலமையிலான மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில், உறுப்பினர் அட்டைக்கு பெயர் கொடுத்துவிட்டார். அரசியலுக்கு வந்து என்ன கிழிக்கப்போறீங்க? என்ற கேள்வி கேட்ட நிருபர்களிடமெல்லாம் புவா சொல்வது ஒரே மாதிரியான பதில்தான்.
”மூ.மு.க. தேவர் அமைப்பு. நானும் அந்த சமுதாயத்தைச்சேர்ந்தவள். என் சமூக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அதில் என்னை இணைத்துக்கொண்டேன்” என்று சொன்னால் சிரிப்பு வராமல் இருக்குமா?
வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு மைக் முன்னாடி தைரியமா நிற்க முடியுமா?
“ஏன் முடியாது கல்லூரியில படிக்கும்போது பேச்சுப்போட்டியில எத்தனை கப் வாங்கியிருக்கேன் தெரியுமா?” என கேட்ட புவனேஸ்வரியிடம், அந்த கப்பெல்லாம் இப்போ ரொம்ப துரு புடிச்சி போயிருக்குமே? என நக்கலடிக்க எழுந்த நாக்கை என்ன செய்வது?

புதன், 27 மே, 2009

ஆக்‌ஷன்... கேமரா : ஷெரின் அடுத்த ஸ்டெப்


ஆக்‌ஷன்... கேமரா : ஷெரின் அடுத்த ஸ்டெப்
இனி நடிகர் நடிகைகளின் கன்னத்தில் ஷெரினின் அறை விழலாம். அட ஆமாங்க.
ஷெரின் டைரக்டராகப் போறாராம்.

வாய்ப்பு இல்லாததால் 'கண்டேன் காதலை' படத்தில் தமன்னாவுக்கு அக்காவாக
நடிக்கப்போறார். ஷெரினைப்பற்றி வந்த லேட்டஸ்ட செய்தி இதுதான். இது
ஷெரின் காதிலும் விழ, அந்த செய்தியை பரப்பியவர்கள் ஷெரின் சாபத்திற்கு
உள்ளாகும் அளவிற்கு கடுப்பானார்.

சரி என்னதான் செஞ்சிக்கிட்டு இருக்கீங்கன்னு சொன்னாத்தானே தெரியும்
என்றபோது சொன்னார் இப்படி...

"ரொம்ப நாளாவே டைரக்ஷன் மீது எனக்கு ஆசை இருக்கு. ஆசைங்கறதைவிட
கனவுன்னுகூட சொல்லலாம். என்னோட கைவசம் நிறைய கதைகள் இருக்கு.
முதலில் இந்திப் படம் இயக்கலாம் என்று இருக்கிறேன். இயக்குனராவதற்கு
முறைப்படி அனுபம்கெர் பள்ளியில் இயக்கம், நடிப்பு பயிற்சி பெற்று வருகிறேன்.
விரைவில் இந்திப் படமொன்றிலும் நடிக்கவுள்ளேன். அதுபற்றிய அறிவிப்பை
புரொடக்ஷ்ன் கம்பெனி வெளியிடும். அக்கா-தங்கை வேடத்தில் நடிக்கும் அளவிற்கு
எனது தகுதி குறைந்துவிட வில்லை. நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான்
நடிப்பேன்" என கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டாவை இடுப்பில்
இறுக்கிக் கட்டுகிறார். (நல்ல ஸ்டைலுமா!)

இன்னொரு சேதி. ஒளிப்பதிவாளர் கபீர்லாலுடன் இணைந்து ஒரு படத்தை
இயக்கப்போகிறாராம் ஷெரீன்

சோனாவின் நீச்சலுடை: இளையராஜாவின் ரியாக்‌ஷன்?


புடலங்காய் உடம்பாய் இருந்தாலும், பூசணிக்காய் உடம்பாய் இருந்தாலும் நடிகைகள் பிகினி டிரஸில் நடித்தால் அது பரபரப்புதான்.

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் ஆர்.கே.நாயகனாக நடிக்கும் படத்தில். வடிவேலுவுக்கும் முக்கியமான கேரக்டர். திடீரென அவருக்கு ஜோடியாக ஒரு கேரக்டரை சேர்த்துள்ளனர். அவர் சோனா. ‘குசேலன்’ படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலுடன் ஜோடி சேரும் சோனாவின் காஸ்ட்டியூம் நீச்சலுடை மட்டும்தானாம்.


அந்த அனுபவம் குறித்து சோனா கூறியதாவது:-

"எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு... ரொம்ப சந்தோஷமா இருக்கு. வடிவேலு சார் கூட திரும்பவும் ஜோடியா நடிக்கிறேன். 6 நாட்கள் என்னோட கால்ஷீட்... 6 நாளும் என்னை நீச்சல் டிரஸ்லயே நடிக்க வச்சிட்டார் இயக்குநர். என்னைப் பொறுத்தவரை அதுவும் நடிப்பு... ஒரு நடிகையா என் வேலையை பக்காவா பண்ணியிருக்கேன். கிளாமர்னாலும் ரசிக்கிற மாதிரி அந்தக் காட்சிகள் இருக்கும்.இந்தப் படத்துல நடிச்சது நிஜமாகவே ஒரு இனிய அனுபவம். மறக்க முடியாதது...", என்கிறார்.

இந்தப் படத்தின் பாடல் காட்சியில் இளையராஜாவும் நடித்துள்ளார். சோனாவின் நீச்சலுடை செய்தியை படித்தப்பிறகு ராஜாவின் ரியாக்‌ஷன் எப்படியிருக்குமோ!?

வெள்ளி, 22 மே, 2009

ஐஸ்வர்யாராய் அடடே... படங்கள்








‘கொல கொலயா முந்திரிக்காய்’


அத்திப்பூப்பதுடன் ஒப்பிடலாம் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் பிரவேசம்.‘வல்லமை தாராயோ’ படம் மூலம் நம்பிக்கை தரும் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, மீண்டும் ஒரு ஸ்கிரிப்டுடன் களம் காணும் படம் ‘கொல கொலயா முந்திரிக்காய்’.

ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஷுட்டிங் ஹவுசில் நேற்று பூஜை போட்ட கையோடு படப்பிடிப்பை தொடங்கிவைத்தார் இயக்குனர் K.பாலச்சந்தர். கார்த்திக் நாயகனாகவும், பெங்களூர் வரவு ஸ்ரீகா நாயகியாக நடிக்கும் படத்தின் கதை,வசனத்தை கிரேசிமோகன் எழுத, திரைக்கதை எழுதி இயக்குகிறார் மதுமிதா. ‘வெண்ணிலா கபடிக்குழு’ செல்வகனேஷ் இசையமைக்கிறார். திரிசக்தி சந்தரராமன் தயாரிக்கிறார்.
“முழுக்க முழுக்க காமெடி த்ரில்லராகத்தான் இந்த ஸ்கிரிப்டை வடிவமைத்திருக்கிறோம். இந்த கதைக்கு கார்த்திக்கை விட்டால் பொருத்தமான ஹீரோ கிடைக்காது என்பதால் அவரை தேர்வு செய்தேன். ரசிகர்களுக்கு வெரைட்டியான சினிமா கொடுத்தால்தான் அவர்களிடம் நமது பெயரை தக்கவைத்துக்கொள்ளமுடியும். அந்தவகையில் ‘வல்லமைதாராயோ’ படத்தின் ஸ்டைல் துளியுமில்லாத ஒரு திரைக்கதையை இதில் பார்க்கலாம். சென்னை, பாண்டிச்சேரி,காரைக்குடி,தனுஸ்கோடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தப்போகிறோம்” என்ற மதுமிதாவை சுற்றி நின்ற உதவி இயக்குனர்களும் பெண்களே.
“எத்தனையோ காமெடி படங்கள் வந்தாலும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை இதுவரை எந்த படமும் தொடமுடியவில்லை. அந்த தூரத்தை இப்படத்தின் மூலம் தொட முயற்சி பண்ணியிருக்கிறோம். ‘பஞ்சதந்திரம்’ மாதிரி ஒவ்வொரு காட்சியும் காமெடியா இருக்கும்” என வசனகர்த்தா கிரேசி மோகன் சொல்ல, மைக்கை வாங்கிய தயாரிப்பாளர் சந்தரராமன் “ ‘பஞ்சதந்திரம்’ என்பதைவிட இந்த படம் ஆறாவது தந்திரம் என்றால் பொருத்தமாக இருக்கும்” என்றபோது மகள் மதுமிதாமேல் உள்ள நம்பிக்கை வெளிப்பட்டது.

‘வால்மீகி’ :பிக்பாக்கெட் பற்றிய கதை


கோணார் தமிழுரையைக் காட்டிலும் தெளிவாக இருக்கிறது சினிமா பற்றிய அனந்தநாராயணனின் பார்வை. விகடன் டாக்கீஸ் நிறுவனத்திற்காக ‘வால்மிகி’ படத்தை இயக்கிவரும் இவர், ஷங்கரின் மாணவர்.
முதலில் இந்த கதையை லிங்குசாமிதான் தயாரிப்பதாக இருந்ததாம். அதுமுடியாமல் போகவே படத்தின் கதையை கேட்ட ஒளிப்பதிவாளர் அழகப்பன், கதை சூப்பரா இருக்கு நானே தயாரிக்கிறேன்னு சொன்னாராம். அதே நேரத்தில் விகடன் டாக்கீஸ், அனந்த நாராயணணுக்கு அட்வான்ஸ் கொடுக்க, படம் இப்போ பாடல் வெளியீட்டு விழாவரை வளர்ந்துள்ளது.
“நாம எல்லோருக்குமே பிக்பாக்கெட் பசங்களோட சின்னதாவது ஒரு பரிட்சயம் இருக்கும். உங்ககிட்டயிருந்து பணத்தை அடிச்சியிருக்கலாம். அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு அந்த அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது செய்தியிலாவது படிச்சிருக்கலாம். ஏதோ ஒரு வகையில் நமக்கு அந்த பசங்களோட பாதிப்பு இருக்கும். அவங்க உலகம் ரொம்ப மூர்க்கமானது.
அந்த வாழ்க்கையின் நியாய அநியாயங்கள் அத்தனையையும் எந்த சினிமா சாயமும் இல்லாம உள்ளது உள்ளபடி சொல்லியிருக்கோம். ஒரு இயக்குனரோட வேலை கதை ரெடி பண்ணி தயாரிப்பாளர் ஓ.கே சொல்வதுடன் 50 சதவிதம் முடிந்துவிடுகிறது. மீதம் 50 சதவீதம், நடிகர்கள், டெக்னீஷியன்களோட உழைப்புதான் பூர்த்திபண்ணும். படத்துக்கு இசைஞானிதான் இசை என்பதில் ஆரம்பத்திலிருந்தே உறுதியா இருந்தேன். கதையை கேட்டுட்டு அவரும் சம்மதித்ததால் எனது விருப்பம் நிறைவேறிருக்கு. மலையாளத்தில் பெரிய ஜாம்பவான்களோட படத்துல ஒளிப்பதிவு செய்துள்ள அழகப்பன் சார் ஒளிப்பதிவு செய்திருக்கார்.
’கல்லூரி‘அகில்தான் பிக்பாக்கெட் பையனா நடித்திருக்கிறார். மீரா நந்தன், தேவிகான்னு ரெண்டு நாயகிகள். இந்த மூனு பேருமே பிரமாதமா பண்ணியிருக்காங்க. இயல்பை சிதைக்காத முகங்கள் வேண்டும் என்பதற்காக ரோட்ல நடந்து போனவங்களையெல்லாம் கூப்பிட்டு நடிக்க வைத்திருக்கேன். எதார்த்த நடிப்பும், நேர்மையான உழைப்பும் கலந்துதான் படம் உருவாகியிருக்கு” என்றார் இயக்குனர் அனந்த நாராயணன்.