வெள்ளி, 22 மே, 2009

‘கொல கொலயா முந்திரிக்காய்’


அத்திப்பூப்பதுடன் ஒப்பிடலாம் தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் பிரவேசம்.‘வல்லமை தாராயோ’ படம் மூலம் நம்பிக்கை தரும் இயக்குனராக அறிமுகமான மதுமிதா, மீண்டும் ஒரு ஸ்கிரிப்டுடன் களம் காணும் படம் ‘கொல கொலயா முந்திரிக்காய்’.

ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஷுட்டிங் ஹவுசில் நேற்று பூஜை போட்ட கையோடு படப்பிடிப்பை தொடங்கிவைத்தார் இயக்குனர் K.பாலச்சந்தர். கார்த்திக் நாயகனாகவும், பெங்களூர் வரவு ஸ்ரீகா நாயகியாக நடிக்கும் படத்தின் கதை,வசனத்தை கிரேசிமோகன் எழுத, திரைக்கதை எழுதி இயக்குகிறார் மதுமிதா. ‘வெண்ணிலா கபடிக்குழு’ செல்வகனேஷ் இசையமைக்கிறார். திரிசக்தி சந்தரராமன் தயாரிக்கிறார்.
“முழுக்க முழுக்க காமெடி த்ரில்லராகத்தான் இந்த ஸ்கிரிப்டை வடிவமைத்திருக்கிறோம். இந்த கதைக்கு கார்த்திக்கை விட்டால் பொருத்தமான ஹீரோ கிடைக்காது என்பதால் அவரை தேர்வு செய்தேன். ரசிகர்களுக்கு வெரைட்டியான சினிமா கொடுத்தால்தான் அவர்களிடம் நமது பெயரை தக்கவைத்துக்கொள்ளமுடியும். அந்தவகையில் ‘வல்லமைதாராயோ’ படத்தின் ஸ்டைல் துளியுமில்லாத ஒரு திரைக்கதையை இதில் பார்க்கலாம். சென்னை, பாண்டிச்சேரி,காரைக்குடி,தனுஸ்கோடி ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தப்போகிறோம்” என்ற மதுமிதாவை சுற்றி நின்ற உதவி இயக்குனர்களும் பெண்களே.
“எத்தனையோ காமெடி படங்கள் வந்தாலும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தை இதுவரை எந்த படமும் தொடமுடியவில்லை. அந்த தூரத்தை இப்படத்தின் மூலம் தொட முயற்சி பண்ணியிருக்கிறோம். ‘பஞ்சதந்திரம்’ மாதிரி ஒவ்வொரு காட்சியும் காமெடியா இருக்கும்” என வசனகர்த்தா கிரேசி மோகன் சொல்ல, மைக்கை வாங்கிய தயாரிப்பாளர் சந்தரராமன் “ ‘பஞ்சதந்திரம்’ என்பதைவிட இந்த படம் ஆறாவது தந்திரம் என்றால் பொருத்தமாக இருக்கும்” என்றபோது மகள் மதுமிதாமேல் உள்ள நம்பிக்கை வெளிப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக