புதன், 20 மே, 2009

சார்லஸ் ஆண்டனியாக நடிக்கும் சிம்பு


உலகத் தமிழர்களின் உள்ளங்களில் சோகக் கொள்ளியை கொதிக்க கொதிக்க கொட்டி வருகிறது புலிகள் பற்றிய செய்திகள். பிரபாகரன் இறந்துவிட்டார் என்றும் உயிருடன் இருக்கிறார் என்பதான முரண்பட்ட செய்திகளில் இரண்டாவது உண்மையாக இருக்காதா என ஏங்குகிறது மனிதாபிமானிகளின் மனசு.

இதற்கும் சிம்பு பட செய்திக்கும் என்ன தொடர்பு? என கேட்பவர்கள் தொடர்க செய்தியை...

கௌதம் மேனன் இயக்கத்தில் தற்போது சிம்பு நடித்து வரும் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' இதில் சிம்புவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் அடுத்து தான் இயக்கி நடிக்கவுள்ள படத்திற்கு தயாராகிவிட்டார் சிம்பு. படத்துக்கு 'வாலிபன்' என பெயரிடப்பட்டுள்ளது.

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரி்ககும் இப்படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடம். இதில் ஒரு கேரக்டரின் பெயர் சார்லஸ் ஆண்டனி. அதாவது சமீபத்தில் வீரமரணமடைந்த பிரபாகரனின் மகனின் இறப்பு பாதித்ததால் படத்தில் தனது கேரக்டர் பெயரை அவ்வாறு வைத்துள்ளாராம். சிம்புவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறாராம். இதுதவிர இரண்டாவது கதாநாயகிக்கான தேர்வும் நடந்துவருவதாக தயாரி்ப்பு தரப்பில் சொல்லப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக