செவ்வாய், 19 மே, 2009

விவேக் ஓபராய்- சூர்யா நடிக்கும் இந்தி படம்


ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் அடுத்த ஸ்டெப்பை எடுத்துவைக்கிறார் சூர்யா. என்ன புரியலையா? பாலிவுட்டுக்கு போகப்போறாருங்க.

ஒவ்வொரு படத்திலும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது சூர்யாவின் கேரியர். இதோ இப்போகூட 'அயன்' ஹவுஸ்ஃபுல்லாக போய்க்கொண்டிருக்க, உற்சாகத்துடன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சூர்யா. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் 'ஆதவன்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா, அடுத்து ஹரி இயக்கும் 'சிங்கம்' படத்திற்காகவும் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

அடுத்த கால்ஷீட்டிற்காக தமிழ் தயாரி்பபாளர்கள் தூண்டில் போட்டுவர, சூர்யாவுக்கு ராம்கோபால்வர்மா வலை வீசியுள்ளார் தாதாக்களின் நிழல் உலகையும், திகில் படங்களையும் இயக்குவதில் கெட்டிக்காரரான ராம்கோபால் வர்மா, அடுத்ததாக 'ஏக்த சரித்ரா' என்னும் படத்தை இயக்குகிறார்.

ஆந்திர மாநிலத்தில் பரிதாவா ரவி, மாட்டால் செருவு சூரி ஆகிய இரண்டு பிரபலங்களின் வாழ்ககையை மையமாக வைத்து உருவாகும் உண்மை கதையாம் இது. இதில் ரவி கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடிக்க, சூரி வேடத்தில் சூர்யா நடிக்கிறாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக