புதன், 20 மே, 2009

இயேசு நாதரும் பிரபாகரனும்


ஏற்கனவே மூன்று முறை பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறிவிட்ட ஊடகங்கள், இலங்கையின் புழுகை நம்பி நான்காவது முறையாக அவர் இறந்துவிட்டதாக கூறிவருகின்றன. இந்த நிமிடம்வரை அது உறுதிசெய்யப்படாத நிலையில் "தலைவர் மீண்டும் மக்கள் முன் தோன்றுவார்" என பிரபாகரனின் ஆதரவாளர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

உண்மையான பிரபாகரனின் தோற்றத்திற்கும் சடலத்துக்கும் உள்ள வேறுபாடுகளை புலிகள் தரப்பு சுட்டிக் காட்டியுள்ளதைப் பார்த்தால் நமக்கும் அது உண்மையாக இருக்கும் என தோன்றுகிறது. அவர்கள் எழுப்பும் சந்தேகங்கள்:-.

(i)2004-ம் ஆண்டு வெளியிட்ட படத்தில் இருப்பதை விட 4 ஆண்டுகளுக்குப்பின்பு இப்போது வெளியான படத்தில் பிரபாகரன் இளமையாக தோற்றம் அளிப்பது எப்படி? (40 வயதுக்கு உள்பட்ட தோற்றத்தையே ராணுவம் வெளியிட்ட படம் பிரதிபலிக்கிறது).

(ii) முகத்தில் முன்பு இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லையே ஏன்?

(iii)கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மேலும் போர் நடைபெற்று கொண்டு இருந்த சூழ்நிலையில் அவர் கனகச்சிதமாக முகச்சவரம் செய்திருப்பாரா? தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்துச்செல்வார்? என்ற சந்தேகமும் எழுகிறது. அடையாள அட்டை புத்தம் புதிதாகவும் உள்ளது.

(iv)ஆம்புலன்ஸ் வண்டியில் தப்பிச்செல்லும்போது துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானதாக அறிவித்த ராணுவம், அதற்கு மாறாக, நேற்று மதியம் 12 மணி அளவில் முல்லைத்தீவு நந்திக்கடல் கழிமுக பகுதியில் இருந்து உடலை கண்டுபிடித்ததாக அறிவித்து உள்ளது.

(v)தலையின் மேற்பகுதி மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.

(vi)பிரபாகரனின் நாடி நடுவில் ஒரு வெட்டு உள்ளது போன்ற இரட்டை நாடி ஆகும். வீடியோ படத்தில் அப்படி இல்லை.

(vii)பிரபாகரனின் கை சற்று பருமனாக இருக்கும். இந்த படத்தில் அப்படி இல்லை.

(viii) இவற்றை எல்லாம் விட தலைவருக்கென்று சில அடையாளங்கள் உண்டு. புலிகளுக்கு என்றும் சில அடையாளங்கள் உண்டு. அவை யாதும் இதில் இல்லை. (அதுபற்றி நாங்கள் விளக்கமாக சொல்ல முடியாது.)

(ix)இறந்து பல மணி நேரம் ஆகியும் தண்ணீருக்குள் கிடந்த அவருடைய உடல் உப்பவில்லை. படத்தில் காண்பிக் கப்படுவதுபோல், தலையை பொம்மையை போல் அசைக்கமுடியாது என்று தடய அறிவியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

(x)தலைவரின் முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ் டிக் சர்ஜரி முறையில் செய்து ஒட்டிவிட்டு, அதை மறைக்க யூனிபார்மும், தலையில் துணியும், பாதி உடலும் என்று காட்டுகிறார்கள்.

மேற்கண்டது போன்ற பல சந்தேகங்களை விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவாளர்கள் எழுப்பி உள்ளனர்.

மேலும் கடந்த 1988-89-ம் ஆண்டில் இதேபோல் ஒரு முறை இறந்ததாக கூறப்பட்ட பிரபாகரன், 1990 இறுதிவரை 'இறந்தவரா'க இருந்ததால்தான் எம்மால் பின்னர் அவரை உயிருடன் காண முடிந்தது என்றும், அதுபோல இப்போது இறந்ததாக சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும் என்றும், தேவையான நேரத்தில் பிரபாகரன் மக்கள் முன் தோன்றுவார் என்றும் அவர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்து உள்ளனர்.

எதுஎப்படியோ பிரபாகரன் மீண்டும் உயிருடன் வந்தால் உயிர்த்தெழுந்த இயேசுநாதரைப்போல உலகத்திற்கு ஆச்சர்யம் அளிப்பது நிச்சயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக