புதன், 13 ஜனவரி, 2010

திரை இசையில் இசைப்புயலின் மாற்றம்


மொத்தம் ஏழு பாடல்கள். ராகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு ரகமாய் இனிக்கவும் சிலிர்க்கவும் வைத்தது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மானின் விரல்கள் ஜாலம் காட்டியுள்ளது.
லண்டனில் சில வாரங்களுக்கு முன் பாடல் வெளியீட்டு விழாவை நடத்திய கெளதம் மேனன், இரண்டாவது முறையாக சென்னையிலும் பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். எந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் இப்படி பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாய் இருந்தது விழா.
திரையில் படத்தின் ஸ்டில்கள் ஒளி பரப்ப,படத்தில் பாடியுள்ள அத்தனை பாடகர்களும் மேடையேறி லைவ் ஷோ நடத்த, செவிகளுக்கும், விழிகளுக்கும் செம விருந்து. ‘ஓமன பெண்ணே..’,’ஹோசானா...’ விண்ணைத்தாண்டி வருவாயா..’,’மன்னிப்பாயா...’ உள்ளிட்ட அத்தனைப்பாடல்களும் செம ஸ்வீட்.
விழாவின் வி.ஐ.பி.கள், ரஹ்மானும், கமலும்தான். மேடையில் வத வதவென்று இருக்கைகள் போடாமல் வி.ஐ.பிகளை மேடையேற்றிய கெளதம் மேனன், கமலின் கையில் சி.டியை கொடுத்து வெளியிட வைத்தார். ”ஐம்பது வருடங்களுக்கு முன் கேமிரா முன் நின்ற கமல் இப்போதும் நடித்துக்கொண்டிருப்பது புல்லரிக்க வைக்கிறது” என்று கெளதம் பேச, அடுத்து பேசிய கமல்,” எனக்குள் இன்னும் அரிப்பு இருப்பதால்தான் இன்னுமும் இயங்க முடிகிறது. த்ரிஷா போலவே படத்தையும் அழகாக எடுத்திருக்கிறார் இயக்குனர்” என பாராட்டினார்.
”பேசுறதுக்கு ஒண்ணும் இல்லை, ஜெய்கோ..” என பேச்சை முடிக்க பார்த்த இசைப்புயல், ”வழக்கமா பல்லவி சரணம் இல்லாத ஒரு ஸ்டைலை இந்த படத்தில் டிரை பண்ணியிருக்கிறேன். எல்லாருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் “என தனது புதுப்பாணி பற்றி முதல் முறையாக சொன்னார்.

வியாழன், 7 ஜனவரி, 2010

’விண்ணைத் தாண்டி வருவாயா’ பாடல் வெளியீடு

திங்கள், 4 ஜனவரி, 2010