சனி, 28 பிப்ரவரி, 2009

sneha new stills(சினேகா புதிய படங்கள்)



’விண்ணைத்தாண்டி வருவாயா’ படங்கள்








ஸ்ரீகாந்த்துக்கு ஆண் குழந்தை




அதிரசம் வாங்கப்போன இடத்தில் அல்வா இலவசமாக கிடைத்துபோல இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் ஸ்ரீகாந்த். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது அதிரசம் என்றால் அவரது பிறந்தநாளிலேயே மகனும் பிறந்திருக்கும் செய்தி திருநெல்வேலி அல்வாவின் தித்திப்பு.

'ரோஜா கூட்டம்' படம் மூலம் மேக்கப் போட ஆரம்பித்தார் ஸ்ரீகாந்த். முதல் படமே சூப்பர்ஹிட்டாக, இளசுகள் மத்தியில் ஸ்ரீகாந்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். 'பார்த்திபன் கனவு', 'ஏப்ரல் மாதத்திலே' உள்பட பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ காதல் விஷயத்தில் சோதனை சூறாவளியில் சிக்கிக் கொண்டார். பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தனாவை கைப்பிடித்தார்.

கடந்த வருடம் ஸ்ரீ-வந்தானா திருமணம் நடந்தது. வந்தனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஸ்ரீகாந்தின் பிறந்தநாளிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளதுதாயும் சேயுமாக நலமாக இருப்பதாக தெரிவித்த ஸ்ரீகாந்த்... "இன்‌று எனது பி‌றந்‌த நா‌ள்‌. இன்‌று என்‌ மகனும்‌ பி‌றந்‌தி‌ருக்‌கி‌றா‌ன்‌. எனக்‌கு என்‌ பி‌றந்‌த நா‌ள்‌ பரி‌சா‌க எனக்கு என்‌ மனை‌வி‌ என்‌ மகனை‌ தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. யா‌ருக்‌குமே‌ கி‌டை‌க்‌கா‌த அற்‌பு‌தமா‌ன பரி‌சு. இரண்‌டு பே‌ருமே‌ ஒரே‌ நா‌ளி‌ல்‌ பி‌றந்‌த நா‌ளை‌ கொ‌ண்‌டா‌டுகி‌றோ‌ம்" என்‌றா‌ர்‌.

வியாழன், 26 பிப்ரவரி, 2009

ரஜினி நடிக்கும் 'அரசன்'



ரஜினிக்கு இருக்கும் மார்க்கெட்டை பயண்படுத்தி காசு பார்க்கும் ஆசையில்,இந்தியிலிருந்து தூசு தட்டப்பட்ட ஒரு படத்தை தமிழில் டப்பிங் செய்கிறது ஆர்.கே.மூவிஸ் என்னும் நிறுவனம்.

எட்டு வருடங்களுக்கு முன் இந்தியில் வெளிவந்து முதலுக்கு மோசமில்லாமல் சம்பாதித்துக்கொடுத்த படம் ‘கூன் கா கார்ஸ்'. இப்படத்தில் ரஜினிகாந்த், சஞ்சய்தத்,வினோத் கண்ணா நடித்திருந்தனர். இந்த மூவருக்கும் ஆளுக்கொரு ஜோடியாக டிம்பிள் கபாடியா,சரிகா,சங்கீதா பிஜ்லானி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். ரஜினிக்கு இருக்கும் மவுசை மனதில்கொண்டு இப்படத்தை தமிழில் 'அரசன்' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

இரண்டேகால் மணி நேரம் ஓடும் படத்தில் ரஜினி வரும் காட்சிகள் ஒரு மணிநேரம் பத்து நிமிடங்கள் இடம்பெறுகிறதாம். ரஜினிகென்று மூன்று பாடல்களும், மூன்று சண்டை காட்சிகளும் இருக்கிறதாம். படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் நவீன தொழில்நுட்பத்தில் ரீ கரெக்‌ஷன் செய்யப்பட்டுள்ளதாம். படத்தை கியூப் மற்றும் ufo முறையிலும் பாடல்களை 5.1 டி.டி.எஸ் சவுண்ட் முறையிலும் உருவாக்கியுள்ளனராம்.

டப்பிங் படத்திற்காக ஜனவரி 16-ந் தேதி சென்சார் செய்யப்பட்டு போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிந்துள்ள நிலையில் மார்ச் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆடியன்ஸின் பல்ஸ் பார்ப்பதற்காக கடந்த வாரம் சென்னையிலுள்ள பரணி ப்ரிவியூ தியேட்டரில் சில ரசிகர்களுக்கு படத்தை போட்டு காட்டியதாம் தமிழ் உரிமையை வாங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனம்.

புதன், 25 பிப்ரவரி, 2009

ஹாலிவுட் படங்களுக்கு இசை: ரஹ்மான் பேட்டி



சென்னை திரும்பியுள்ள இசைப்புயல், மூன்று ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.

தனது இல்லத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:-


”ஒரு தமிழனாய் பிறந்து ஆஸ்கர் விருது பெற்றதை நினைத்து பெருமையடைகிறேன். தமிழ், இந்தி என பிரித்து பார்ப்பதை நான் விரும்பவில்லை. எல்லோரும் ஒன்றாக இருக்கவேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறேன். பாலிவுட்,ஹாலிவுட் என்று போனாலும் தமிழ் சினிமாவையும் மறக்கமாட்டேன். ஆஸ்கார் விருது பெற்ற பிறகு மூன்று ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்த இரவு நேரத்திலும் எனக்கு வரவேற்பு அளித்த ரசிகர்களுக்கு நன்று கூறுகிறேன்” என்றார்

உலகநாயகன் ரஹ்மானுக்கு உற்சாகவரவேற்பு


மேளதாளங்கள் முழங்க, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்லம்டாக் படத்தில் இசையமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை பெற்று தமிழகத்திற்கும் இந்திய திரையுலகத்திற்கும் பெருமைசேர்த்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இன்று அதிகாலை சென்னை திரும்பினார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து துபாய் வழியாக சென்னை வந்த அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தேசியகொடியை அசைத்து வாழ்த்து முழக்கம் எழுப்பினர். கரகாட்டம், மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.அமைச்சர் பரிதி இளம் வழுதி,விமான நிலையத்திற்கு சென்று தமிழக அரசு சார்பில் வரவேற்றார்.

பின்னர், கோடம்பாக்கம் டாக்டர் சுப்பராயன் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ரஹ்மான் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். வீட்டிற்கு அருகே போடப்பட்டிருந்த மேடையில் டிரம்ஸ் சிவமணி டிரம்ஸ் இசைத்து ரஹ்மானை வரவேற்றார். மேடையில் நடிகர்கள் பார்த்திபன், சிம்பு ஆகியோர் இருந்தனர். வீட்டிற்கு முன்பு திரண்டிருந்த ரசிகர்களுக்கு ஆஸ்கார் விருதுகளை கையில் உயர்த்தி பிடித்து காண்பித்தபோது ரஹ்மானுக்கு பறக்கும் முத்தங்களை வழங்கினர்.












சேரன்,பரத்,அசினுக்கு கலைமாமணி விருது




இயக்குனர் சேரன், நடிகர் பரத், நடிகைகள் அசின்,நயன்தாரா, மீராஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


”கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம் வழங்கி சிறப்பு செய்துவருகிறது.விருதுபெரும் ஒவ்வொருவருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கலைமாமணி விருதுக்கான கலைஞர்களை தேர்வுசெய்து தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, விருது பெறுபவர்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.”


தமிழக அரசு அறிவித்துள்ள பட்டியலில் நாட்டிய,நாடக,சினிமா, இசை துறை உள்பட 71 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயக்குனர்கள் சேரன்,சுந்தர்.சி, நடிகர்கள் பரத், பசுபதி,வையாபுரி, நடிகைகள் அசின்,நயன்தாரா,மீராஜாஸ்மின்,சரோஜாதேவி,ஷோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், வசனகர்த்தா வேதம்புதிது கண்ணன், கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் அபிராமிராமநாதன் ஆகிய சினிமாதுறையை சார்ந்த 15 பேர் கலைமாமணி விருதை பெறவுள்ளனர்.

வைரமுத்துவின் தமிழ்த்தாய் வாழ்த்து




சர்க்கரை பொங்கல் போல வைரமுத்துவின் உரை, எப்போதுமே சுவை. சுவைக்கு சுவை சேர்ப்பதுபோன்ற ஒரு காரியத்தை செயலாக்க திட்டமிட்டுள்ளார் வைரமுத்து. ஏ.ஆர்.ரஹமான் இசையில் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுவதுதான் அத்திட்டம்.

கே.ராஜேஸ்வர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்-நமிதா நடித்துள்ள படம் இந்திரவிழா. யதிஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது. வைரமுத்து டிரைலரை வெளியிட, பாலுமகேந்திரா பெற்றுக்கொண்டார்.

விவேக், நாசர், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினர். சிறப்பு விருந்தினர்கள் தங்களது உரை மூலம் பார்வையாளர்களை கவர, நமிதா தனது உடை மூலம் கவர்ந்த செய்தி தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தியே!

"ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது வாங்கியுள்ளார். இந்திரவிழா இயக்குனர் ராஜேஸ்வரும் அப்படி திறமை படைத்தவர்தான். ஆங்கில இலக்கியங்கள் பற்றியும், ஹாலிவுட் சினிமா பற்றியும் ஏராளமாக தெரிந்துவைத்திருக்கிறார்" என பாராட்டினார் பத்மஸ்ரீ விவேக்.

கவிஞர் வைரமுத்து பேசியபோது, மகிழ்ச்சியும் முக்கியமும் கலந்த செய்தி ஒன்றை வெளியிட்டார்.

"நானும் ஏ.ஆர்.ரஹ்மானும் திட்டமொன்றை வைத்துள்ளோம். ஒருமுறை நான் மலேசியாவிற்கு சென்றபோது தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்க வேண்டிய நேரத்தில் வேறொரு பாடலை ஒலிபரப்பினார்கள். நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்தான 'நீராரும் கடலுடுத்த...' பாடல் இந்திய எல்லைகளை வரையறுத்துதான் எழுதப்பட்டுள்ளது. இதில் எல்லா மாநிலங்களும் இடம்பெறும். ஆனால் தனியாக தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை. எனவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரே மாதிரியான தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதற்காக புதிய தமிழ்த்தாய் வாழ்த்தொன்றை எழுதலாமே என்ற எண்ணம் வந்தது.

பாடல் எழுதுவது சரி, யார் அதற்கு இசையமைப்பது என்ற கேள்வி வந்தபோது, ரஹ்மானுக்கு போன்செய்து விஷயத்தை கூறினேன். அவரும் இசையமைப்பதாக ஒப்புக்கொண்டார். எனவே விரைவில் அதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என்றார்.

செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கவ்பாய் கதை சொல்லும் ‘இரும்புகோட்டை முரட்டுசிங்கம்'


சிம்புதேவன் படத்தின் தலைப்பே பாதி கதை சொல்லிவிடும். லாரன்ஸ் நடிப்பில் சிம்பு இயக்கும் புதிய படத்திற்கு ‘இரும்புகோட்டை முரட்டுசிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது.


‘இம்சை அரசன் 23ம் புலிகேசி', ‘அறை எண் 305-ல் கடவுள்' படங்களைத்தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படம் ‘இரும்புகோட்டை முரட்டுசிங்கம்'. லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். பத்மப்ரியா,லட்சுமிராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.


15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இப்படம், கவ்பாய் கதையாக உருவாக்கப்படவுள்ளது. 38 வருடங்களுக்கு முன்பு ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த கவ்பாய் படம் ‘கங்கா'. அதற்குபிறகு கவ்பாய் கதையம்சம் கொண்ட படங்கள் வெளிவரவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவரவுள்ள கவ்பாய் படம் ‘இரும்புகோட்டை முரட்டுசிங்கம்'தான். இதுபற்றி சிம்புதேவன் கூறுகையில், தமிழ்நாட்டில் கவ்பாய் கதைகள் அதிகம் வந்ததில்லை. எனவே இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

நான் கடவுள் - கலப்பின கருத்துக்கள்


காய்த்த மரம்தான் கல்லடிபடும் என்பார்கள். அந்த வகையில் நான் கடவுள் படம் கல்லடியும் பட்டிருக்கிறது கண்ணடியும் பட்டிருக்கிறது.

எப்போது இவர் படம் வெளிவரும், எப்படியிருக்கும் என்ற ஆவலை தூண்டும் இயக்குனர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் இருக்கிறார்கள். இவ்வகையில் பாலாவுக்கும் விடலாம் ஒரு விரலை. எடுத்தது நான்கே படங்கள்தான் என்றாலும் தமிழ் சினிமாவில் பாலா உண்டாக்கிய தாக்கம், அத்திபூக்கும் செயலுக்கு ஒத்தது.

இதோ கடவுள் வெளிவந்து ஒரு வாரமாகிவிட்டது. படித்தவர்முதல் பாமரர்வரை நான் கடவுளுக்கு தரும் மதிப்புரை பலரகங்கள். ஒரு பக்கம் ஆஹா அற்புதம்... என்ற பாராட்டுக்களும், கைத்தட்டல்களும் பாலாவின் உழைப்பிற்கும் திறமைக்கும் உற்சாக டானிக்கை வார்த்துக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் கசப்பான விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

சூப்பர் ஸ்டார், கலைஞானியின் படங்களுக்குகூட இல்லாத அளவில் நான் கடவுளுக்கு வரும் ஏராள விமர்சனங்கள் செவிகளில் விழுந்து சிந்தனையின் அதிகபட்ச இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு வருகின்றன. இதுவரை எந்தவொரு தமிழ்சினிமாவுக்கும் இல்லாத வகையில் பாலா படத்திற்கு ஏகப்பட்ட இணையதளங்களும், வலைப்பூக்களும் (Blog) விமர்சனங்களை பதிவு செய்துள்ளது.

விமர்சனத்தில் Good போட்டவர்களும் உண்டு. குட்டு வைத்தவர்களும் உண்டு. தங்களை அறிவு ஜீவிகளாக நினைத்துக்கொண்டிருப்பவர்களின் கருத்துத்தானே என சாதாரணமாக இதனை எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் பட்டாணி சுண்டல் விற்பவர் முதல் பலதரப்பட்ட ரசிகர்களும் படம்விட்டு வெளியே வரும்போது வெளிப்படுத்தும் கருத்துக்களும் இப்படித்தான் தினுசு தினுசாக இருக்கிறது.


"ஆயிரம் பக்கங்களில் எழுத வேண்டிய ஒரு புதினத்தை இரண்டரை மணி நேரத்தில் அடைக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். அதில் 500 பக்கங்கள் அல்லது அரை கிணறுதான் தாண்ட முடிந்திருப்பது வேதனை. இரண்டு கதைகளையும் அதற்கான தளத்தையும் முடிவு செய்துவி்ட்டு எதற்கு முக்கியத்துவம் தருவது என குழம்பிபோய் இரண்டையும் சொதப்பியிருக்கிறார் பாலா. காசியில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் படமாக்கியதாய் பேட்டிகளில் அறிய முடிந்திருந்தது. ஆனால் படத்தில் அரை மணி நேரம்கூட அந்தக் காட்சிகள் வராமல்போனது ஏமாற்றம்" என அதிஷா ஆன்லைனில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிச்சைப்பாத்திரம் என்ற வலைப்பூவில் (Blogspot) "பாலா தனது திரைப்படங்களை தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் அடைத்துக் கொள்ள விரும்புகிறார். ஒருவன் இருப்பான், மிக வலிமையானவன், மூர்க்கன், பஞ்ச பூதங்களைத்தவிர .யாராலும் அவனைக் கட்டு்பபடுத்த இயலாது. சட்டமும் நீதியும் கூட அவனை ஒன்றும் செய்ய முடியாது. சமூகத்தின் தீயசக்தியை வன்முறையின் உக்கிரத்தோடு அழித்து விடுவான். அமைதியாக இருக்கும் அவனை அதற்கு யாராவது உசுப்பிவிட வேண்டும். மிகக்கொடூரமான பூடகமான சூழலில் உருவாக்கப்படும் அவன் சமூகத்தின் நீரோட்டத்தில் கலக்க முற்படும்போது அதற்கான மோதல்கள் நிகழும்.

பாலாவின் நாயகர்கள் தொடர்ந்து இப்படித்தான் இருக்கிறார்கள். இப்போது ருத்ரனாக ஆர்யா. அருவாளை தூக்கிக் கொண்டு எதிர்நாயகனை நோக்கி வீர வசனம் பேசும் வழக்கமான வெகுஜனப்பட நாயகர்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகத்தான் பாலாவின் நாயகர்களைப் பார்க்க முடிகிறது. இதுவே பார்வையாளனுக்கு ஒரு சலிப்பைத் தரக்கூடும்." என தனது கருத்தை பதிவு செய்துள்ளார் வலைப்பூவின் சொந்தக்காரர்.

"கண்ணுக்கு புலப்பட்டும், மனசுக்கு புலப்படாத பி்ச்சைக்காரர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தி, த்தோ பாருங்கடா என்கிறார் பாலா! விளிம்பு நிலை மனிதர்களின் அவலத்தை இதைவிட செருப்பால் அடித்தாற் போல சொன்னவர்கள் எவரும் இலர். ஜெயமோகனின் வசனங்களில் தெறிக்கும் அனல். தாரை காய்ச்சி ஊற்றியது போல அவ்வளவு சூடு. படம் முடிந்து வெளியே வரும்போது, "சே... என்னடா உலகம் இது" என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள் இருவரும்! என தமிழ்சினிமா இணையதளததில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

தாமிரா புலம்பல்கள் என்னும் வலைப்பூவில்...

"எனக்கு பர்சனலா என்ன வருத்தம்னா, படத்தில் காட்டப்பட்டுள்ள மாற்றுத்திறன் படைத்த மனிதர்களைப் பார்க்கும்போதே நமக்கு அதன் வீரியம் விளங்கிவிடுகிறது. இதில் அவர்களை ஒரு கட்டத்தில் கொடுமைப்படுத்துவதுபோல காட்சிகள் அமைக்க வேண்டுமா? அது நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் காண விரும்பாவிட்டால் அது இல்லை என்றாகிவிடாது என்பது சரிதான். இருப்பினும் பாலா போன்ற இயக்குனர்கள் வசனங்களாலேயே தேவையான தாக்கத்தை ஏற்படுத்திவிடமுடியும் என்றே நம்புகிறேன். இன்னொரு காட்சியில் வில்லன் ஒரு ஊனமுற்ற பெண்ணை கல்லால் தாக்குவது. அதை அவ்வளவு நீண்ட நேரம் காட்ட வேண்டிய அவசியமில்லை. மேலும் அந்த பெரிய கல்லால் அவ்வளவு தூரம் தாக்கப்படும் பெண் உயிரிழப்பது அரிது என்பதை யாவரும் உணர்வர்" என விமர்சிக்கப்பட்டுள்ளது.

ஞானியின் ஓ பக்கங்களில் இந்த வார குட்டு பாலாவுக்குதான். "ஊனமுற்றவர்களை வைத்து பிச்சை வியாபாரம் செய்யும் தன்னுடைய தாண்டவன் பாத்திரம் போல, நானும் உடல் ஊனமும் மனநலக் குறையும் உடையவர்களை வைத்துப் படம் எடுத்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிப் பிழைப்பதற்காக அவர்களுடைய மனித உரிமைகளை மீறியிரு்ககும் இயக்குனர் பாலாவுக்கும், இந்த அராஜகமான படத்தை குழந்தைகளும் பார்க்கலாம் என்று 'யூஏ' சான்றிதழ் கொடுத்திருக்கும் தணிக்கைக் குழுவுக்கும் இந்த வார குட்டு".

பல சமயங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும் படைப்புகள், காலங்கடந்தும் வேறூன்றி நிற்கும் விருட்சமாக மாறும். நான் கடவுள் விருட்சம்தான். இந்த விருட்சம் வருங்கால இயக்குனர்களுக்கு விதைத்திருக்கும் பாடமும் உள்ளீடாக தெரிகிறது.

விமர்சனங்களெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், பத்திரிகையாளர்கள் காட்சி முடிந்து வெளிவந்ததும் எதிர்பட்ட பாலாவிடம் ஒரு நிருபர் வைத்தகேள்வி இதுதான். பல காட்சிகள் முழுமை பெறாமல் தொங்குவது போன்ற ஒரு உணர்வு வருகிறதே?

இதற்கு பாலா சொன்ன பதில்தான் தத்துவத்தின் அடையாளமாக இருந்தது. "வாழ்க்கையிலும் எந்தக் காட்சிதான் முழுமையானது என்று சொல்ல முடியுமா? ஒரு நாளேனும் முழுமையாய் வாழ்ந்து விட்டால் அடுத்த நாளின் மகத்துவம் புரியாது. மனசு, வாழ்க்கை எல்லாவற்றிலும் உள்ள குறைகள்தான் இந்தப்படத்திலும் தெரியும். அவற்றை தெரி்நதேதான் அனுமதித்தேன்" என்றார் பாலா.

You can give a link at the end... This is one movie which has received lots of
reviews in internet

http://tamil.cinesouth.com/scopes/reviews/new/naankeng.shtml
http://www.athishaonline.com/2009/02/blog-post_07.html - Athisha
http://pitchaipathiram.blogspot.com/2009/02/blog-post.html - Suresh Kannan
http://ennam.blogspot.com/2009/02/blog-post.html - Abdul Kalam Azad
http://thamira-pulampalkal.blogspot.com/2009/02/blog-post_07.html - Thamira
http://mathavaraj.blogspot.com/2009/02/blog-post_07.html - Madhavaraj
http://snapjudge.com/2009/01/21/நான்-கடவுள்-சென்சார்-விம/
- Snap Judgement
http://truetamilans.blogspot.com/2009/02/blog-post_06.html - True Tamilan
http://www.luckylookonline.com/2009/02/blog-post_06.html - Yuva Krishna
http://urfriendchennai.blogspot.com/2009/02/blog-post_10.html - Ram Suresh

அரைத்த மாவையே அரைக்காதீர் : கமல் அட்வைஸ்




ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கூறியுள்ள கமல், இனியாவது தமிழ் படத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டுமென தமிழ்த்திரையுலகினரை அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து கமல் தெரிவித்த கருத்து வருமாறு :-

"ஒரு இந்தியனுக்கு முதன் முதலாக ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதற்காக சந்தோஷப்படுகிறேன். இதுதான் உண்மையான அங்கீகாரம்.

நம் நாட்டில் படம் எடுத்து அதை விருதுக்கு அனுப்பி, ஒரு விருந்தாளிக்கு விருந்து கொடுப்பது போல் நடப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்க படத்தில் வேலை செய்து விருது பெற்றிருப்பதுதான் உண்மையான அங்கீகாரம். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏ.ஆர்.ரஹமானுடன் இணைந்து பணிபுரிவது. ஒரு இனிமையான அனுபவம். அவர் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வார், பழகுவதற்கு இனியவர். இந்த நிமிடத்தில் இருந்தாவது நம் படங்களில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும்" என்று கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டு விழா : திரளும் திரையுலகம்


ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹமானுக்கு பிரமாண்டமான பாராட்டு விழாக்களை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழ்த் திரைப்பட தயாரி்பபாளர்கள் சங்கத் தலைவர் இராம.நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
"ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றவுடன் முதலில் கூறியது "எல்லா புகழும் இறைவனுக்கே" என்பதுதான். தான் வாழ்ந்த தமிழகத்தையும் தமிழினத்தையும், தமிழையும் மறக்காமல் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தமிழர்களின் மனதில் ஒரு அழுத்தமான இடத்தை பிடித்து விட்டார்.

தான் சுவாசித்து, நேசித்த தமிழை மறக்காமல், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். உலக இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பின்பும் அடக்கமாகவும், எளிமையாகவும் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், என்றென்றும் பெயரோடும், புகழோடும் வாழ்வார்.

தமிழர்களை தலைநிமிர வைத்த அவருக்கு தமிழ் திரையுலகில் உள்ள அனைத்து பிரிவினரும் சேர்ந்து ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் இணைந்து, மிக பிரமாண்டமான முறையில், மாபெரும் பாராட்டு விழா நடத்த முடிவு செய்து இருக்கிறோம்" என தெரிவி்த்துள்ளார்.
இதற்கு முன்னதாக திரை இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடக்கவுள்ளது.




இதுகுறித்து அச்சங்கம் அறிவித்துள்ளதாவது:-
மார்ச் 1-ம் தேதி மாலை, திரை இசைக்கலைஞர்கள் சங்கம் ஆடிட்டோரியத்தில் உலகின் மிகப்பெரிய விருதான ஆஸ்கார் விருதினை பெற்ற முதல் இந்தியர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டி கௌரவப்படுத்தும் முதல் விழாவை வண்ணமயமாக நடத்தவிருக்கிறோம்.
மேலும் அவர் பெற்ற, 'கோல்டன் குளோப்' மற்றும் 'பாப்டா' விருதுகளுக்காகவும் பாராட்டவிருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு செவாலியர் டாக்டர்.எம்.பாலமுரளிகிருஷ்ணா தலைமை ஏற்கிறார். ஏ.வி.எம்.சரவணன், கே.பாலசந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டு ஏ.ஆர்.ரஹமானை பாராட்டி பேசவிருக்கிறார்கள். இந்த மாபெரும் விழாவில் எங்கள் திரைஇசைக்கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், பிரபல பாடகர், பாடகிகள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்தியாவின் புகழ்பெற்ற இசை வல்லுனர்களும் இசை நட்சத்திரங்களும் விழா மேடையை அலங்கரிப்பார்கள்.