புதன், 25 பிப்ரவரி, 2009

சேரன்,பரத்,அசினுக்கு கலைமாமணி விருது




இயக்குனர் சேரன், நடிகர் பரத், நடிகைகள் அசின்,நயன்தாரா, மீராஜாஸ்மின் உட்பட 71 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-


”கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் கலைஞர்களை பாராட்டி ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகளை தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம் வழங்கி சிறப்பு செய்துவருகிறது.விருதுபெரும் ஒவ்வொருவருக்கும் பொற்பதக்கம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு கலைமாமணி விருதுக்கான கலைஞர்களை தேர்வுசெய்து தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம் பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரைகளை ஏற்று, விருது பெறுபவர்களை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.”


தமிழக அரசு அறிவித்துள்ள பட்டியலில் நாட்டிய,நாடக,சினிமா, இசை துறை உள்பட 71 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயக்குனர்கள் சேரன்,சுந்தர்.சி, நடிகர்கள் பரத், பசுபதி,வையாபுரி, நடிகைகள் அசின்,நயன்தாரா,மீராஜாஸ்மின்,சரோஜாதேவி,ஷோபனா, இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், வசனகர்த்தா வேதம்புதிது கண்ணன், கலை இயக்குனர் பி.கிருஷ்ணமூர்த்தி, தயாரிப்பாளர் அபிராமிராமநாதன் ஆகிய சினிமாதுறையை சார்ந்த 15 பேர் கலைமாமணி விருதை பெறவுள்ளனர்.

1 கருத்து:

  1. wish you know about water-cure protocol and spread it for your people in your nation too thanks from Healthy Wealth blogger http://theinnozablog.blogspot.com

    பதிலளிநீக்கு