செவ்வாய், 24 பிப்ரவரி, 2009

கவ்பாய் கதை சொல்லும் ‘இரும்புகோட்டை முரட்டுசிங்கம்'


சிம்புதேவன் படத்தின் தலைப்பே பாதி கதை சொல்லிவிடும். லாரன்ஸ் நடிப்பில் சிம்பு இயக்கும் புதிய படத்திற்கு ‘இரும்புகோட்டை முரட்டுசிங்கம்' என பெயரிடப்பட்டுள்ளது.


‘இம்சை அரசன் 23ம் புலிகேசி', ‘அறை எண் 305-ல் கடவுள்' படங்களைத்தொடர்ந்து சிம்புதேவன் இயக்கும் படம் ‘இரும்புகோட்டை முரட்டுசிங்கம்'. லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை ஏ.ஜி.எஸ்.நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். பத்மப்ரியா,லட்சுமிராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.


15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் இப்படம், கவ்பாய் கதையாக உருவாக்கப்படவுள்ளது. 38 வருடங்களுக்கு முன்பு ஜெய்சங்கர் நடித்து வெளிவந்த கவ்பாய் படம் ‘கங்கா'. அதற்குபிறகு கவ்பாய் கதையம்சம் கொண்ட படங்கள் வெளிவரவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளிவரவுள்ள கவ்பாய் படம் ‘இரும்புகோட்டை முரட்டுசிங்கம்'தான். இதுபற்றி சிம்புதேவன் கூறுகையில், தமிழ்நாட்டில் கவ்பாய் கதைகள் அதிகம் வந்ததில்லை. எனவே இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக