
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கூறியுள்ள கமல், இனியாவது தமிழ் படத்தில் மாற்றத்தை கொண்டு வரவேண்டுமென தமிழ்த்திரையுலகினரை அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து கமல் தெரிவித்த கருத்து வருமாறு :-
"ஒரு இந்தியனுக்கு முதன் முதலாக ஆஸ்கார் விருது கிடைத்திருப்பதற்காக சந்தோஷப்படுகிறேன். இதுதான் உண்மையான அங்கீகாரம்.
நம் நாட்டில் படம் எடுத்து அதை விருதுக்கு அனுப்பி, ஒரு விருந்தாளிக்கு விருந்து கொடுப்பது போல் நடப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏ.ஆர்.ரஹ்மான் அமெரிக்க படத்தில் வேலை செய்து விருது பெற்றிருப்பதுதான் உண்மையான அங்கீகாரம். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
ஏ.ஆர்.ரஹமானுடன் இணைந்து பணிபுரிவது. ஒரு இனிமையான அனுபவம். அவர் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வார், பழகுவதற்கு இனியவர். இந்த நிமிடத்தில் இருந்தாவது நம் படங்களில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும்" என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக