சனி, 28 பிப்ரவரி, 2009

ஸ்ரீகாந்த்துக்கு ஆண் குழந்தை




அதிரசம் வாங்கப்போன இடத்தில் அல்வா இலவசமாக கிடைத்துபோல இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் ஸ்ரீகாந்த். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது அதிரசம் என்றால் அவரது பிறந்தநாளிலேயே மகனும் பிறந்திருக்கும் செய்தி திருநெல்வேலி அல்வாவின் தித்திப்பு.

'ரோஜா கூட்டம்' படம் மூலம் மேக்கப் போட ஆரம்பித்தார் ஸ்ரீகாந்த். முதல் படமே சூப்பர்ஹிட்டாக, இளசுகள் மத்தியில் ஸ்ரீகாந்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். 'பார்த்திபன் கனவு', 'ஏப்ரல் மாதத்திலே' உள்பட பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீ காதல் விஷயத்தில் சோதனை சூறாவளியில் சிக்கிக் கொண்டார். பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து வந்தனாவை கைப்பிடித்தார்.

கடந்த வருடம் ஸ்ரீ-வந்தானா திருமணம் நடந்தது. வந்தனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் ஸ்ரீகாந்தின் பிறந்தநாளிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளதுதாயும் சேயுமாக நலமாக இருப்பதாக தெரிவித்த ஸ்ரீகாந்த்... "இன்‌று எனது பி‌றந்‌த நா‌ள்‌. இன்‌று என்‌ மகனும்‌ பி‌றந்‌தி‌ருக்‌கி‌றா‌ன்‌. எனக்‌கு என்‌ பி‌றந்‌த நா‌ள்‌ பரி‌சா‌க எனக்கு என்‌ மனை‌வி‌ என்‌ மகனை‌ தந்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌. யா‌ருக்‌குமே‌ கி‌டை‌க்‌கா‌த அற்‌பு‌தமா‌ன பரி‌சு. இரண்‌டு பே‌ருமே‌ ஒரே‌ நா‌ளி‌ல்‌ பி‌றந்‌த நா‌ளை‌ கொ‌ண்‌டா‌டுகி‌றோ‌ம்" என்‌றா‌ர்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக