புதன், 9 டிசம்பர், 2009

புவனேஸ்வரி... புழல் டூ புதியபாதை

புழல் சிறைகதவை திறந்துவிட்ட ஜாமினுக்கு கோடி புண்ணியம் சொல்கிறார் புவனேஸ்வரி. வெளியே வந்த கையோடு புதிய பாதையில் போக ஆரம்பித்துள்ளார்.
அரசியல் கட்சி. தனக்கு பாதுகாப்பு கவசம் அதுவாகத்தான் இருக்கமுடியும் என்பதால் சேதுராமன் தலமையிலான மூவேந்தர் முன்னேற்ற கழகத்தில், உறுப்பினர் அட்டைக்கு பெயர் கொடுத்துவிட்டார். அரசியலுக்கு வந்து என்ன கிழிக்கப்போறீங்க? என்ற கேள்வி கேட்ட நிருபர்களிடமெல்லாம் புவா சொல்வது ஒரே மாதிரியான பதில்தான்.
”மூ.மு.க. தேவர் அமைப்பு. நானும் அந்த சமுதாயத்தைச்சேர்ந்தவள். என் சமூக மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அதில் என்னை இணைத்துக்கொண்டேன்” என்று சொன்னால் சிரிப்பு வராமல் இருக்குமா?
வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு மைக் முன்னாடி தைரியமா நிற்க முடியுமா?
“ஏன் முடியாது கல்லூரியில படிக்கும்போது பேச்சுப்போட்டியில எத்தனை கப் வாங்கியிருக்கேன் தெரியுமா?” என கேட்ட புவனேஸ்வரியிடம், அந்த கப்பெல்லாம் இப்போ ரொம்ப துரு புடிச்சி போயிருக்குமே? என நக்கலடிக்க எழுந்த நாக்கை என்ன செய்வது?

1 கருத்து:

  1. வருங்கால முதல்வர அப்படி சொல்லாதிங்க ...... என்ன பண்றது தமிழனோட தலைவிதி ... அர பாட்டுல cm ஆகனும்னு ஆசைப்படறாங்க

    பதிலளிநீக்கு