திங்கள், 9 மார்ச், 2009

பாண்டியராஜனின் அக்கறை



பாண்டியராஜனுக்கு விழி பெரிசா இருக்கும்னு தெரியும்.விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு செயலை அவரு செய்திருப்பது தெரியுமா?

நாலு நிமிடம் ஓடக்கூடிய நல்ல குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் பாண்டியராஜன். ‘இருதுளிகள்’ என பெயரிடப்பட்டுள்ள அப்படம், போலியோ நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை சொல்கிறதாம். இதில் பாண்டியராஜனுடன் அஸ்வின் என்ற சிறுவன் நடித்துள்ளானாம்.

அட நல்ல விஷயம்தானே.. என கைத்தட்டுபவர்கள் இன்னொருமுறையும் தட்டுங்க. ஏனா, இக்குறும்படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.லக்னோவில் ஏப்ரல் 7-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடைபெறவுள்ள(cms) சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவில் பங்கேற்கிறதாம்.பிலிம் டுடே நிறுவனம் இருதுளிகளை தயாரித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக