வெள்ளி, 20 மார்ச், 2009

பணக்காரர்கள் சொத்து ஏழைகளுக்கு: வினயன் சொல்லும் சூப்பர் மேட்டர்


'காசி', 'என் மன வானில்', 'அற்புத தீவு' படங்களை தொடர்ந்து வினயன் தமிழில் இயக்கும் நான்காவது படம் ’நாளை நமதே’.

நாயகனாக நடிக்க, நூறுபேரை அழைத்துவந்து சலித்தெடுத்ததில் தேறிய பிரதீப்தான் இதில் நாயகன். கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவராம். இன்னொரு நாயகனாக 'காதல்னா சும்மா இல்ல' படத்தில் நடித்த சர்வானந்த். நாயகி, 'தாதாசாஹிப்' என்னும் மலையாளப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான தனிஷா.

வினயன் படம் என்றாலே விஷயம் இல்லாமல் இருக்காது. இதிலும் விஷயம் இருக்கு.

இந்தியாவில் 110 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் சுமார் 10 கோடி மக்கள் நடைபாதையில் வசிப்பதோடு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, குடியுரிமை அட்டை என எதுவுமே இல்லாமல் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பல கோடி சொத்துக்களை வைத்திருக்கும் பணக்காரர்களும் இருக்கிறார்கள். இப்படி இருவேறுபட்ட பொருளாதார நிலையில் மக்கள் வசிக்கிறார்கள். 500 கோடிக்கு மேல் சொத்துள்ளவர்களின் சொத்தை அரசாங்கம் எடுத்து நடைபாதையில் வாழும் மக்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை உள்ளடக்கிய கதை அம்சம் கொண்ட படமாக உருவாகிறதாம்.

"இப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஸ்மாவேலி கேரளாவில் ஆலுவாய் என்ற இடத்தில் ஜனசேவா என்ற பெயரில் முன்னூறு ஆதரவற்ற குழந்தைகள் கொண்ட ஒரு குழந்தைகள் நல காப்பகத்தை நடத்தி வருகிறார். இப்படி சேவை மனப்பான்மை கொண்ட அந்த தயாரிப்பாளருக்கு பொருத்தமான கதையாக நாளை நமதே படத்தின் கதை அமைந்திருக்கிறது" என்கிறார் வினயன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக