திங்கள், 23 மார்ச், 2009

பாபர்மசூதி கலவரமும் தடுமாறும் காதலர்களும்


ராஜீவ்காந்தியின் கொலையின் பின்னனியை குப்பி என்ற பெயரில் இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். அதில் அவர் கையாண்டிருந்த தத்ரூப இயக்கம், இவரது அடுத்த படம் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை தூண்டியது. வீரப்பனின் கதையை படமாக்கும் முயற்சியில் இருந்த ரமேஷ், அந்த முயற்சியை தள்ளிவைத்துவிட்டு, வேறொரு படத்தை ஆரம்பித்துவிட்டார்.

போலீஸ் குவார்ட்டர்ஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதே. 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஏற்பட்ட கலவரம், பெங்களூர் போலீஸ் குவார்ட்டர்ஸில் இருந்த காதலர்களை பாதித்த உண்மை சம்பவத்தை அச்சு அசலாக தரப்போகிறாராம். ஒரே நேரத்தில் கன்னடம், தமிழில் உருவாகவுள்ளது. தமிழில் 'காவலர் குடியிருப்பு' என பெயரிட திட்டமிடப்பட்டுள்ளது.

வஷிஸ்டா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இந்துமதி அனிதா தயாரி்ககும் இப்படத்தின் நாயகனாக அனீஸ் தேஜேஸ்வர் நடிக்க, நாயகியாக புதுமுகம் சோனு அறிமுகமாகிறார். மாஸ்டர் சரண், அவினாஸ், சரண்யா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். துவாரகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.

வரும் 27-ந் தேதி பெங்களூர் பசவனாகுடியில் உள்ள கணபதி கோயிலில் படத்தின் தொடக்கவிழா நடக்கிறது. இவ்விழாவில் பெங்களூரில் உள்ள மொத்த காவல்துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளது விழாவின் சிறப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக