புதன், 18 மார்ச், 2009

ஜூன் 7-ந்தேதி ஜெயம்ரவி கல்யாணம்


ஜெயம்ரவி -ஆர்த்திக்கு முகூர்த்த தேதியாக ஜூன் 7-ந்தேதி குறிக்கப்பட்டுள்ளது. ”பேராண்மை’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ஜெயம்ரவி, தனது திருமணம் குறித்து வந்த செய்திகளுக்கு விளக்கமளித்தார். புதுமாப்பிள்ளையாகப்போகும் சந்தோஷம் ரவியின் முகத்தில் இப்போதே களைகட்டியுள்ளது.

”சிலபேரை அடிக்கடி நாம சந்திப்பதுண்டு. ஆனா அந்த நபரே ஒரு கட்டத்தில் நம்ம வாழ்க்கையின் முக்கிய பங்கு வகிக்கறவரா வந்து சேர்வார். அது மாதிரிதான் ஆர்த்தியும். எங்க ரெண்டு குடும்பமும் அடிக்கடி சந்தித்துக்கொள்ளும்.அப்போதான் ஆர்த்தி எனக்கு அறிமுகம். ஜஸ்ட் பேமிலி பிரண்டா மட்டும் இருந்தோம். திடீர்னு ஒருநாள் ஆர்த்தி எனக்குதான்னு பேசி முடிச்சிட்டாங்க. அப்படித்தான் எங்க ரெண்டு பேரோட கல்யாணமும் முடிவானது. இதுவரை என் அப்பா,அண்ணன் பேச்சை மீறி நான் எதுவும் செய்ததில்லை.கல்யாண விஷயத்திலும் அவங்க விருப்பப்படித்தான் நடந்துக்கிறேன். ஆர்த்தி எங்கவீட்டு மருமகளாக வரப்போகிறதை நினைத்தால் சந்தோஷமாத்தான் இருக்கு. இதுவரைக்கும் விளையாட்டு பையனா இருந்துட்டேன். இனி குடும்ப பொறுப்பையும் சுமக்க கத்துக்கணும்.இது சுகமான சுமை” என கவிதை பாணியில் பேசுகிறார் புதுமாப்பிள்ளை.

கல்யாண ஏற்பாடுகள் பற்றி ரவியின் தந்தை எடிட்டர் மோகன் கூறியபோது,” ஜூன் 7-ந்தேதி ஜெயம்ரவி-ஆர்த்தி திருமணம் மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. பட தயாரிப்பாளர் விஜய்குமார்-சுஜாதா விஜயகுமார் தம்பதியின் மகளான ஆர்த்தி BCA வும் master of intermational management- ம் படித்திருக்கிறார்.கல்யாணத்திற்கு அனைத்துக் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அனைவரையும் அழைக்கவுள்ளோம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக