திங்கள், 16 மார்ச், 2009

கெளதம்மேனன் இயக்கத்தில் கார்த்திக்


புரோட்டா சுட்டு அடுக்குவதுபோல தனது படங்களின் பட்டியலை நீட்டிக்கொண்டேயிருக்கிறார் கெளதம் மேனன்.’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை முடிக்கும் முன்னே இன்னொரு படத்திற்கு முறுக்கு பிழிந்துவருகிறார். சூர்யா தம்பி கார்த்திக் கால்ஷீட் தராத கோவமோ என்னவோ, அதே பேர் கொண்ட தனது மானேஜரை ஹீரோவாக்கி, ஷமீராரெட்டியை அவருக்கு ஜோடியாக்கியுள்ளார்.

’வாரணம் ஆயிரம்’ படம் முடிந்த கையோடு, கெளதமின் மண்டைக்குள் உதித்த கதையும் ஆயிரம் இருக்கும் போல.’சென்னையில் ஒரு மழைக்காலம்’ படத்திற்கு ஆயத்தமானவர், திடீரென அந்த புராஜக்டை தள்ளிவைத்தார். இனி அந்த படம் அவ்வளவுதான் என செய்தி போட்ட பத்திரிகையாளர்கள் மீதும் பாய்ந்தார்.’சென்னையில் ஒரு மழைக்காலம்’கைவிடப்படவில்லை என உறுதி அளித்தார்.

இதனைத்தொடர்ந்து வேறு படத்திற்கான கதை விவாதத்தில் தீவிரம் காட்டினார். அந்த படம்தான் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. சிம்பு-த்ரிஷா நடிக்கும் இப்படம் சினிமாவை பின்னணியாக கொண்ட கதை என்கிறது கோலிவுட். இதில் சிம்பு உதவி இயக்குனர் வேடத்தில் நடிக்கிறாராம்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில்தான் தனது மானேஜர் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் இன்னொரு புதிய படத்தை இயக்கிவருகிறாராம் கெளதம். இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த இரு தினங்களாக நடந்துவருகிறது. இப்படம் தவிர அடுத்தமாதம் இன்னொரு புதிய படத்தை இயக்கவும் அட்வான்ஸ் வாங்கியுள்ளாராம் கெளதம் சாரு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக