வியாழன், 19 மார்ச், 2009

தங்கர்பச்சானின்‘களவாடிய பொழுதுகள்’


இதயத்தை களவாடுகிறது தங்கர்பச்சானின் புதுப்படத்தலைப்பு. ஐங்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘களவாடிய பொழுதுகள்'என பெயரிடப்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு முன் தொடங்குவதாக இருந்தது இப்படம். பிரபுதேவாதான் நாயகன் என்பதில் தீர்க்கமாக இருந்தார் தங்கர். இடையில் பிரபுதேவாவின் மகன் இறந்துபோனதால், தற்போது தன்னால் நடிக்கமுடியாது என ஒதுங்கிக்கொண்டார் பிரபுதேவா. ஆனால் சூழ்நிலை சரியாகட்டும் என காத்திருந்த தங்கர், இப்போது தான் நினைத்தபடியே பிரபுதேவாவை காமிராமுன் நிற்கவைத்துவிட்டார்.

ஆடம்பர அழைப்பிதழ்கள் அடித்து பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காமல், நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார் தங்கர். படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்துகொண்டிருகிறது. சொன்ன நாளில் சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து தருவதாக பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளாராம் இயக்குனர். ;எங்கள் அண்ணா படத்திற்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது. படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக பூமிகா நடிக்க, கதாநாயகனுக்கு சமமான பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறாராம்.

’என கனவு படைப்புகளில் இதுவும் ஒன்று. ஒரு அற்புதமான காதல் கதையை களவாடிய பொழுதுகளில் பார்க்கலாம்’ என ஆர்வத்தை தூண்டுகிறார் தங்கர்பச்சான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக