செவ்வாய், 10 மார்ச், 2009

'பாணா’ படத்தில் முரளி மகன்



இளையராஜா முதல் படத்துக்கு கம்போஸ் பண்ணியபோதுகூடத்தான் கரண்ட் போயிடுச்சு. இப்போ அவரு பெரிய ஆளாகலையா....அதுமாதிரிதான் அதர்வாவுக்கு ஏற்பட்ட சகுணமும் சரியாகிடும்.

மேட்டர் என்னன்னா... முரளியோட மகன் அதர்வா கதாநாயகனாக அறிமுகமாகவிருந்த படம் ‘ஆனந்தம் ஆரம்பம்’ ஆனா, படத்துக்கு ஆடம்பரமா பூஜை போட்டதோட நின்னு போச்சு. இதுக்காக கவலைப்படமா, அடுத்த படத்துக்கு முயற்சி பண்ணினாரு அதர்வாவோட அப்பா முரளி. இதோ... அந்த முயற்சி ஜெயமாகிடுச்சு.

ஆமா. சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் டி.தியாகராஜன் தயாரிக்கும் ‘பாணா’ படத்தில் அதர்வாதான் நாயகன். நாயகியாக அறிமுகமாகிறார் சமந்தா. படத்தை இயக்கப்போவதும் புதுமுகம்தான். இயக்குனர் பேரு எல்.கே.

பாணா டைட்டில கேட்டதுமே தயாரிப்பாளர் வேணா சொல்லியிருப்பாரே? என்றால், சிரித்தபடி தலைப்புக்கு அருஞ்சொற் பொருள் சொல்ல ஆரம்பித்தார் இயக்குனர்.” பாணான்னா பெரிய பட்டம் என்று பொருள். ரொம்ப உயரத்தில பறக்கவைக்க முடியும். எதிரி பட்டங்களை எளிதாக அறுத்துவிடமுடியும். கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இருப்பதால் இந்த தலைப்பை வைத்தேன். வடசென்னையில நடக்குற எதார்த்தமான காதல் கதை இது” சுருங்க முடித்தார் எல்.கே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக