
ட்ரீம் வேலி கார்பபரேஷன் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரித்துவரும் இப்படத்தை இயக்குவது அஹமத். ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மாடல் அழகி ப்ரியா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் லஷ்மிராய் நடிக்க, சந்தானம்,சம்பத், ஊர்வசி உட்பட பலர் நடிக்கின்றனர்.
சினிமாவில் பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வரும் ஒரு இளைஞன்
பெற்றோர்களுடன் போராடுவதும், அதனால் ஏற்படும் சிக்கல்களுமே கதையாம். ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என்கிறார் இயக்குனர் அஹமத்.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், யுவன்சங்கர் ராஜா இசையையும் அமைத்துள்ளனர். சென்னை, கோவை, சாலக்குடி ஆகிய இடங்களில் படப்பிடி்பபு நடத்தப்பட்டுள்ளது. படத்தின் திருப்புமுனைக்கு உதவும் சில காட்சிகளும், பாடல் காட்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, பாங்காங், தென் ஆப்பிரிக்கா ஆகிய வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளதாம்.
கதைப்படி ஜெய்க்கு சின்ன பையன் போன்ற தோற்றம் தேவைப்பட்டதால் பத்துகிலோ எடையை கஷ்டப்பட்டு குறைத்து இயக்குனர் சொன்ன தோற்றத்திற்கு மாறி ஒத்துழைப்பு கொடுத்தாராம் ஜெய். படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்துவிட்டதால் அடுத்தமாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக