புதன், 4 மார்ச், 2009

நடிகையை விரட்டியடித்த கொசுக்கடி



தாங்கமுடியாத கொசுக்கடியும், இயக்குனர் கொடுக்கவிருந்த அடியும் ஒரு நடிகையை படப்பிடிப்பிலிருந்து விரட்டியடித்துள்ளது.

’பேராண்மை’. ஜெயம்ரவி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிவரும் படம் இது. படத்துல மொத்தம் அஞ்சு நாயகிகள். அதுல ஒருத்தர்தான் அதிசயா. அட இந்த ‘வட்டாரம்’ படத்துல நடிச்சதுல அந்த பொண்ணுதாங்க. சரி இப்போ கொசுக்கடி மேட்டருக்கு வருவோம்.

தலக்கோணம் காடுதான் ஷூட்டிங் ஸ்பாட். நைட் ஆனா, ஆளையே தூக்கிட்டு போயிடுமாம் கொசு. கொசுக்கடி தாங்கமுடியாத அதிசயா,40 கிலோ மீட்டருக்கு அப்பால இருக்கும் திருப்பதி ஹோட்டலில் தங்கி படப்பிடிப்பிற்கு வந்தாராம்.ஆனா, அதெல்லாம் முடியாது இங்கதான் தங்கனும்னு இயக்குனர் உத்தரவு போட,தட்டமுடியாமல் படப்பிடிப்பு தளத்திலேயே தங்கியிருக்கார் அதிசயா. இதனால கொசு கடிச்சு காய்ச்சலே வந்துடுச்சாம். மறுநாள் பழையபடி ஹோட்டல்ல தங்குன அதிசயா, ஸ்பாட்டிற்கு வந்தபோது, ஏக வசனத்துல ஏசினாராம் ஜனநாதன். எதிர்த்து பேசிய அதிசயாவை அடிக்கவும் கை ஓங்க, அவ்வளவுதான் மூட்டைய கட்டிக்கிட்டு சென்னைக்கு வந்துடுச்சு பொண்ணு. அப்புறமென்ன நடந்த விஷயத்த நடிகர் சங்கத்துல புகாரா எழுதி கொடுத்திருக்காராம் அதிசயா.

நடிகர் சங்கம் விரைவில் பஞ்சாயத்த கூட்டப்போவுதாங்கோ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக