புதன், 18 மார்ச், 2009

அசின் மீது போலீஸில் புகார்


காணவில்லை.
-------------------

பெயர்: நல்லமுத்துக்குமார்,
வயது:23
உடற்கட்டு:வாட்ட சாட்டமான வாலிபர்,
ஊர்:செங்குன்றம்,சென்னை

போலீஸ் கமிஷனரிடம் நல்லமுத்துக்குமாரின் தாயார் கொடுத்துள்ள புகாரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் இது. அவரது புகார் இதுதான்,”எனது மகன் நல்லமுத்துக்குமார் (23) கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜயிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்தான். போக்கிரி படப்பிடிப்பின் போது எனது மகனுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதிகம் சம்பளம் கொடுப்பதாக கூறி உதவியாளர் வேலைக்காக தன்னுடன் அழைத்து சென்று விட்டார் அசின். இடையில் ஒரு முறை சாலை விபத்தில் காயமடைந்த அவனை மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சென்னைக்கு அழைத்து வந்தேன்.

சென்னை வந்தபின் அவனை தன்னுடன் வேலைக்கு வரும்படி அழைத்தார் அசின். அவரது அழைப்பின் பேரில் மீண்டும் மும்பை சென்ற என் மகன் இப்போது எங்கே இருக்கிறான் என்றே தெரியவில்லை. அசினிடம் கேட்டால், அவரும் அவரது அப்பா ஜோசப்பும், உன் மகன் மும்பை தாதா கும்பலிடம் சேர்ந்துவிட்டான் என்று கூறுகிறார்கள். மும்பைக்கு நேரடியாகவே சென்று ஜோசப்பை சந்தித்தபோது, 'நீங்கள் சென்னை செல்லுங்கள். உங்கள் மகனை தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்' என்றார். சிறிது காலமாக நான் போன் செய்தால் கூட எடுப்பதில்லை. எனவே அவர்களிடமிருந்து என் மகனை மீட்டுத்தர வேண்டும்.”

இப்புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ய தொடங்கிவிட்டனராம். சில மாதங்களுக்கு முன் சிறுமி ஒருவரை அசின் தலைமறைவாக வைத்திருப்பதாக அச்சிறுமியின் தயார் புகார்கொடுத்து பின் அந்த கேஸ் சுமூகமாக முடிவடைந்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் அசின் மீது இரண்டாவது முறையாக புகார் கூறப்பட்டுள்ளது, திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக