திங்கள், 23 மார்ச், 2009

தெலுங்கில் ஆர்யாவுக்கு வில்லன் வேஷம்


தமிழில் தனது கால்ஷீட்டை அள்ளிக்கொடுப்பதோடு தெலுங்கு இயக்குனர்களுக்கும் கிள்ளிக்கொடுக்க ஆரம்பித்துள்ளார் ஆர்யா. 'நான் கடவுள்' தெலுங்கில் 'நேனு தேவுட்னி' பெயரில் வெளியாக அங்கும் சூப்பர் ரெஸ்பான்ஸாம். ஆந்திர இயக்குனர்களின் பார்வையும் ஆர்யா மீது விழுந்துள்ளது.

இந்நிலையில் அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் ஆர்யாவை வில்லனாக நடிக்க அழைத்துள்ளனர். ஆர்யாவும் ஓ.கே. சொல்லிவிட்டார். இப்படத்தை இயக்குவது குணசேகர். ஆர்யாவை ஒப்பந்தம் செய்தது பற்றி அவர் கூறும்போது, "நான் கடவுளில் ஆர்யாவின் நடிப்பை பார்த்து மிரண்டு போனவர்களில் நானும் ஒருவன். எனது படத்தில் வில்லன் வேடத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்தோம். வில்லன் என்றாலும் கதாநாயகனுக்கு சமமான கேரக்டர்தான் ஆர்யாவிற்கு" என்றார்.

இன்றிலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாகிறதாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக