சனி, 14 மார்ச், 2009

நானும் இசையும் கிரீஷுக்கு உயிர்:சங்கீதா





இல்லற வாழ்க்கையில் நுழைந்த பிறகு நாயகியாக நடிப்பதென்பது எந்த நடிகைக்கும் குதிரை கொம்புதான். சங்கீதாவுக்கு மட்டும் அந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாயகி அரிதாரம் பூச ஆரம்பித்துள்ளார் திருமதி சங்கீதா கிரீஷ்.

பின்னணி பாடகர் கிரீஷை காதல் திருமணம் செய்துகொண்டு தேனிலவு சென்று திரும்பி சங்கீதாவுக்கு மீண்டும் ஒரு தேன் செய்தி. அது கதாநாயகி வாய்ப்பு. செல்வா இயக்கத்தில் ‘நான் அவன் இல்லை’இரண்டாம் பாகத்தில் சங்கீதாவும் ஒரு நாயகியாக நடிக்கிறாராம்.

உண்மையா மேடம்? என சங்கீதாவுடன் செல் பேசினால்,’கல்யாணம் ஆகிட்டா கதாநாயகியாக நடிக்கும் தகுதி போயிடுமா என்ன? ரொம்ப சந்தேகமா கேட்குறீங்களே?” என கண்கள் சிவக்க எதிர் கேள்வி கேட்டவர்,கொஞ்சம் கூலாகி படம் பற்றி பேசத்தொடங்கினார்.

“கல்யாணத்திற்கு பிறகும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. ஆனா நான் அவனில்லை படத்தை மட்டும் ஒத்துக்கொண்டுள்ளேன். இதுதவிர தெலுங்கில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். அம்மா, அக்கா வேடங்கள் வந்தாலும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் கதையில் எனக்கும் முக்கியத்துவம் இருக்கவேண்டும். அதேபோல கிளாமராகவும் நடிக்கமாட்டேன்.

நான் நடிப்பதற்கு கிரீஷ் எந்த தடையும் சொல்லவில்லை. அவர் எனக்கு தந்திருக்கும் சுதந்திரம் எங்களின் உண்மையான காதலுக்கு அடையாளம். கிரீஷிற்கும் நடிக்கும் ஆசை இருக்கிறது.அதற்கான நல்ல வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.பாடுவதையும் அவர் விட்டுவிடமாட்டார்.என்னை போலவே இசையும் அவருக்கு உயிர்” என கிரீஷின் அருமை பெருமைகளை பட்டியலிடுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக