சனி, 7 மார்ச், 2009

எந்திரன் பாட்டுக்கு மூணு கோடியாம்



’ஏ.. யப்பா.. எல்.ஐ.சி பில்டிங் எம்புட்டு உசரம்’ என ஆச்சர்யப்பட்ட காலத்தைபோலவே, ’எந்திரனின்’ ஒவ்வொரு செய்தியும் ஆச்சர்யப்படவைக்கிறது.


ஷங்கர்,ரஜினி,ஏ.ஆர்.ரஹ்மான்னு காஸ்ட்லி பார்ட்டிகள் கை கோர்க்கும் படம் இது. படத்தை பத்தி செய்திவந்து மூணு நாலு வாரமாச்சேன்னு கூகுல்ல வலை வீசினப்போ சிக்குச்சு ஒரு செய்தி. ரஜினியோட எல்லா படத்துலேயும் ஆரம்பத்துலேயே ஒரு பில்டப் பாட்டு வரும்ல. எந்திரனிலும் அந்த குறைய வைக்கலையாம் ஷங்கர்.

ரஜினி-ஐஸ்வர்யாராயும் ஆட்டம்போடவுள்ள அந்த பாட்டுக்காக மட்டும் மூணு கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளதாம்.(அம்மாடியோவ்னு...நெஞ்ச பிடிக்கிறவங்கள ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போங்கப்பா!) இந்த பாட்டுக்காக ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போட்டு வருகிறாராம் கலை இயக்குனர் சாபுசிரில். ரெண்டு மூணு நாளில் ஷூட்டிங் போகப்போறாங்களாம். நாயகன் நாயகியுடன் 1000 நடனக்கலைஞர்களும் இந்த பாட்டுக்கு ஆடப்போறாங்களாம். ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து மதுஸ்ரீ இப்பாடலை பாடியுள்ளாராம். அந்த சந்தோஷத்துல ஒரு இணையதளத்திற்கு அவர் பேட்டி கொடுத்தபோதுதான் இந்த செய்தியே லீக்கானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக