வெள்ளி, 10 ஏப்ரல், 2009

அரசியல் வேணாம் : ரஜினி, அப்பா வருவார் : சௌந்தர்யா


வருவாரா மாட்டாரா.... ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ஓட்டப்பட்டு வரும் இந்த குழப்ப குதிரை இன்னும் நின்றபாடில்லை. அரசியல் கேள்விகளுக்கு இதுவரை ரஜினி மட்டுமே பதில் சொல்லி வந்த நிலையில் அவரது மகள் சௌந்தர்யாவும் தன் பங்குக்கு கருத்துக்களை பகிர்ந்துகொள்ள துணிந்துவிட்டார்.

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள சௌந்தர்யா, வெங்கட்பிரபு இயக்கும் கோவா படத்தை தயாரித்துவருகிறார். படத்தின் லொகேஷனான தேனிக்கு சமீபத்தில் விசிட் அடித்தார் சௌந்தர்யா. விஷயத்தை மோப்பம் பிடித்த ஒரு வார இதழின் நிருபர், ரெக்கார்டரும் கையுமாக சௌந்தர்யா முன் ஆஜராகிவிட்டார்.

வெங்கட் பிரபுவின் நட்பு, கோவா கதைன்னு போய்க்கொண்டிருந்த பேட்டியில், திடீரென அரசியல் கேள்வியையும் நுழைத்தார் நிருபர். நீங்க அரசியலுக்கு வருவீங்களா?

கேள்வியை கேட்டதும் சௌந்தர்யா ஷாக்காகிப்போயிரு்பபார் என்று நீங்க நினைத்தால் அது தவறு. இதுவரை மீடியாக்களில் சொல்லாத ஒரு தகவலை மனந்திறந்து கொட்டியிருக்கிறார் சௌந்தர்யா அது....

"நான் பாலிடிக்ஸ்ல என்ன நடக்குதுன்னு தினம் ஃபாலோ பண்ணுவேன். எல்லா நியூஸூம் தெரியும். அப்பாவோட நிறைய அரசியல் பேசியிருக்கிறேன். இரண்டு பேருக்கும் அரசியல்ல நிறைய ஐடியாஸ் உண்டு. கிராபிக்ஸ்ல இருந்து சினிமா தயாரிப்புவரை வந்தாச்சு. கண்டிப்பா அரசியலுக்கும் வருவோம். 'அப்பா அரசியலுக்கு வரணும்னு நாங்க சொல்றோம்' அப்பா எப்பவுமே 'மக்களுக்கு நல்லது பண்ணனும், மக்கள் விரும்புறதைச் செய்யணும்'னு சொல்வார். சீக்கிரம் கடவுள் கிருஷ்ணா ஆசியோடு நல்லது பண்ண வருவார்".

சௌந்தர்யா இப்படி சொல்லியிருக்க, 'அசல்' விழாவில் பேட்டியளித்த ரஜினி மீண்டும் தனது பழைய பதிலை தந்திருக்கிறார்.

சிரஞ்சீவிபோல நீங்களும் அரசியலுக்கு வருவீங்களா?

நோ...நோ... பாலிடிக்ஸ். "அரசியலுக்கு வரும் எண்ணமில்லை அதுபற்றி கேள்வி எதுவும் கேட்காதீங்க என 50 டிகிரி அளவுக்கு டென்ஷனை வெளிப்படுத்தி விடைபெற்றுக்கொண்டார்".

1 கருத்து: